Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- வானிலை ஆய்வு மையம்

By: Monisha Thu, 24 Dec 2020 3:15:17 PM

அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.12.2020 அன்று தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

sky,cloudy,dry,hot,windy ,வானம்,மேகமூட்டம்,வறட்சி,வெப்பம்,காற்று

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று மற்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|