சின்ன தல என்று அழைப்பது கொடுப்பினை; சென்னை ரசிகர்கள் பற்றி சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி
By: Nagaraj Wed, 19 Aug 2020 8:03:25 PM
சின்ன தல என அழைப்பது கொடுப்பினை... சிஎஸ்கே ரசிகர்கள் தோனியையும், என்னையும் தல, சின்னத் தல என அழைப்பது கொடுப்பினை என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனியும், சுரேஷ் ரெய்னாவும் சமீபத்தில் தெரிவித்தார்கள். எனினும் இருவரும் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார்கள்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடனான பேட்டியில் சென்னை ரசிகர்களின் அன்பு பற்றி சுரேஷ் ரெய்னா கூறியதாவது:
தோனியையும், என்னையும் தல, சின்னத் தல என ரசிகர்கள் அழைப்பது தூய்மையான
அன்பின் வெளிப்பாடு. எங்களுக்குக் கிடைத்த கொடுப்பினை. ஷோலே படத்தில்
வருகிற ஜெய் மற்றும் வீருவைப் போல எங்களை அப்படி அழைக்கிறார்கள். இதை எண்ணி
எங்கள் வாழ்நாள் முழுக்க மகிழ்ந்திருப்போம். அவர்கள் எங்கள் கிரிக்கெட்டை
ரசிக்கிறார்கள். நாங்களும் பொறுப்புடன் நடந்துகொள்கிறோம். எங்களுடைய
இயல்பான விளையாட்டை வெளிப்படுத்த ரசிகர்கள் எங்களுக்குச் சுதந்திரம்
வழங்கியுள்ளார்கள் என்றார்.
இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு
அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும்
ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி,
ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.