Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்

By: vaithegi Thu, 06 July 2023 11:45:50 AM

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்

சென்னை: கடந்த 1996-2001-ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2003-ம் ஆண்டு புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அமைச்சர் பொன்முடி தமது மாமியார் பெயருக்கு பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், கடந்-த 2004ம் ஆண்டு பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

special court,minister ponmudi , சிறப்பு நீதிமன்றம்,அமைச்சர் பொன்முடி


இதனை அடுத்து இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி பொன்முடி மனு தாக்கல் செய்தார். எனவே இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து 2007ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதன் பின்னரே பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுவருகிறது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனால், பொன்முடி உள்ளிட்ட மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Tags :