பழ.நெடுமாறனின் கூறிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை ராணுவம்
By: Nagaraj Tue, 14 Feb 2023 04:56:24 AM
இலங்கை: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ள நிலையில், பிரபாகரன் உயிருடன் இல்லையென இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
தஞ்சையில் நேற்று செய்தியாளர்களை உலக தமிழ் பேரமைப்பு பழ.நெடுமாறன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் பிரபாகரன் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரவிஹேரத், 2009ம் ஆண்டு மே 18ம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டார்.
அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஈழதமிழர்கள் மத்தியில் வெகுவாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.