Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை கடற்படையினர் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினர் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வலியுறுத்தல்

By: Nagaraj Sun, 09 July 2023 1:27:24 PM

இலங்கை கடற்படையினர் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வலியுறுத்தல்

சென்னை: இலங்கை படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

need to rescue,action,fishermen,15 people,released,arrested ,மீட்க வேண்டும், நடவடிக்கை, மீனவர்கள், 15 பேர், விடுதலை, கைது

கச்சத்தீவை ஒட்டிய இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்த சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பாக இந்திய-இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|