வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் மாநிலம் முடிவு
By: Nagaraj Sun, 02 Aug 2020 1:32:58 PM
அசாமில் பள்ளி, கல்லூரிகளை வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்திலும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கும் மத்திய அரசு அறிவித்துள்ளபடி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மாநில கல்வி அமைச்சர் பிஸ்வாஸ் கூறியதாவது: அசாமில் கொரோனா
கட்டுக்குள் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால் செப்டம்பர் மாதம் 1 ஆம்
தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும்
திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக வரும் 23ம் தேதி முதல்
30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.