நீதிமன்ற சீரமைப்பு சட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டம் தீவிரம்
By: Nagaraj Sun, 27 Aug 2023 8:44:08 PM
இஸ்ரேல்: இஸ்ரேல் மக்கள் போராட்டம்... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீதிமன்ற சீரமைப்பு சட்டத்தை எதிர்த்து 34 வாரங்களாக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசின் நீதிமன்ற சீர் திருத்தத்தை எதிர்க்கும் இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமரின் இந்த சீர்திருத்தத்தை எதிர்த்து போராடி வரும் எதிர்ப்பாளர்கள், பிரதமரின் புதிய சட்டதிருத்தம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்தை பறிக்கும் என்றும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக இந்த மசோதாவுக்கான முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.