Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவில் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக ஆய்வில் தகவல்

ரஷியாவில் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக ஆய்வில் தகவல்

By: Karunakaran Sat, 05 Sept 2020 5:25:45 PM

ரஷியாவில் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக ஆய்வில் தகவல்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், ரஷியா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த தடுப்பூசி பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்து விட்டது.

இதனால் இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி, பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல கட்டங்களாக பொதுமக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த தடுப்பூசியை போட ஆயத்தமாகி வருகின்றனர். முதலில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

corona vaccine,russia,immunity,corona virus ,கொரோனா தடுப்பூசி, ரஷ்யா, நோய் எதிர்ப்பு சக்தி, கொரோனா வைரஸ்

தற்போது ரஷியா கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்-5 பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும், இந்த ஆய்வில் பங்கேற்ற 76 பேருக்கும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவானதாகவும், இந்த மருந்தின் மூலம் உருவான நோய் எதிர்ப்பு சக்தியானது கொரோனாவில் இருந்து இயற்கையாகவே மீண்ட பிறகு மக்கள் கொண்டிருந்த நோயெதிர்ப்பு சக்தியை ஒத்திருந்ததாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து 28 நாட்களில் டி-செல்களை உருவாக்குகிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வில் ஈடுபடாத விஞ்ஞானிகள் கூறுகையில், தற்போதைய ஆய்வு முடிவுகள் நேர்மறையான அறிகுறியாக இருந்தபோதும், மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் 3ஆம் கட்ட சோதனைகளின் முடிவில்தான், இந்த தடுப்பூசி உண்மையில் கொரோனா நோயை தடுக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|