Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் திடீர் சந்திப்பு

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் திடீர் சந்திப்பு

By: Karunakaran Sat, 04 July 2020 1:31:36 PM

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த கூட்டணியில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கூட்டணி ஆட்சியில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்து காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மந்திரிகள் பாலசாகேப் தோரட், அசோக் சவான் ஆகியோர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசி, கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று கூறினர்.

uttav thackeray,sarat pawar,maharastra,sudden meeting ,உத்தவ் தாக்கரே, ஷரத் பவார், மகாராஷ்டிரா, திடீர் சந்திப்பு

இந்நிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இருவரும் திடீரென சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த சந்திப்பில், மாநிலத்தின் தற்போதைய நடப்பு விவகாரங்கள், கொரோனா பிரச்சினை போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :