பெண்கள் படிக்க தடை விதித்த தாலிபான்கள்... அமெரிக்க அமைச்சர் கண்டனம்
By: Nagaraj Sun, 25 Dec 2022 9:31:08 PM
வாஷிங்டன்: உலகம் முழுவதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள்தான் மையமாக உள்ளனர். இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் உயர்கல்வி பெற தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச எதிர்ப்புகளும் எழுந்தன. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துமாறு தலிபான் அரசாங்கம் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்றால், ஆப்கானிஸ்தானில்
அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று பொருளாதார துறை மந்திரி
தெரிவித்துள்ளார். இந்நிலையில், நிறுவனங்களில் பெண்களை பணியமர்த்த தடை
விதித்த தலிபான்களின் உத்தரவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட என்ஜிஓ நாடுகள்
கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகம் முழுவதும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள்தான் மையமாக உள்ளனர்.
இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த தடை
மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவியை சீர்குலைக்கும் என்றும்
அவர் கூறினார்.