சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவு
By: vaithegi Mon, 26 Sept 2022 1:16:36 PM
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது
காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது.
அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதிய தொழில் முதலீடுகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.