Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் மேற்கூரையிலிருந்து ஆற்றில் குதித்த வாலிபருக்கு பற்கள் உடைந்தது

ரயில் மேற்கூரையிலிருந்து ஆற்றில் குதித்த வாலிபருக்கு பற்கள் உடைந்தது

By: Nagaraj Wed, 19 Aug 2020 3:29:13 PM

ரயில் மேற்கூரையிலிருந்து ஆற்றில் குதித்த வாலிபருக்கு பற்கள் உடைந்தது

இதுபோன்ற செயல்கள் சாதனை அல்ல வேதனை என்பதை செய்து பார்த்து உணர்ந்து கொண்டுள்ளார் உள்ளார் உக்ரைன் வாலிபர்.

உக்ரைன் நாட்டில் ஓடும் ரயிலின் மேற்கூரையிலிருந்து ஆற்றில் குதித்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பற்கள் காலியாகி உள்ளது.

தலைநகர் கிவ் பகுதியைச் சேர்ந்த யரொ பஞ்சன்கோ என்ற இளைஞர் தனது நண்பருடன் விசித்திரமான சாதனை செய்ய விரும்பினார். இதற்காக ரயிலில் பயணம் செய்த அவர், அதன் மேற்கூரையில் ஏறி குறிப்பிட்ட தூரம் நடந்து சென்றார்.

waliper,train roof,river bridge,pain,teeth ,வாலிபர், ரயில் மேற்கூரை, ஆற்றுப்பாலம், வேதனை, பற்கள்

தொடர்ந்து அங்கிருந்து ஆற்றுப் பாலத்தை ரயில் கடந்து சென்ற போது, ரயிலின் மேற்கூரையில் இருந்து ஆற்றில் குதித்தார்.

பஞ்சன்கோ குதித்த நேரத்தில் உடல் இழுக்கப்பட்டு தண்ணீரில் முகம் மோதியதில் அவரின் சில பற்கள் உடைந்து நொறுங்கின. ஆயினும் வேறு காயங்களின்றி அதிசயமாக உயிர் தப்பினார் பஞ்சன்கோ. இது சாதனையா? அந்த வாலிபருக்கு ஏற்பட்ட வேதனைதானே என்று மக்கள் நொந்து கொள்கின்றனர்.

Tags :
|