Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது

சென்னையில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது

By: vaithegi Wed, 26 July 2023 3:17:38 PM

சென்னையில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது

சென்னை: சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன், குருவாயூர் ஆகிய விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு .. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி முதல் காலை 7.45 மணிக்கு புறப்படும் எனவும், இந்த ரயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும் எனவும், அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

cholan,guruvayur,express train ,சோழன், குருவாயூர் ,விரைவு ரயில்

மேலும், திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சோழன் விரைவு ரயில் (22676) காலை 10.15 மணிக்கு பதிலாக, காலை 11 மணிக்கு புறப்படும் எனவும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, எழும்பூர் – குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (16127) காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும் எனவும், நான்குநேரி வரை உள்ள நிலையங்களில் 5 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நேரம் மாற்றப்பட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :
|