Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும்

திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும்

By: vaithegi Tue, 09 Aug 2022 8:54:21 PM

திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும்

திருப்பதி: திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதியில் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மேலும் ஆகஸ்ட் 11 முதல் 15 வரையிலான பண்டிகை நாட்களில் கூட்டம் மிகவும் அலைமோதும்.

எனவே இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் ஆகியோர் திருப்பதி யாத்திரையை ஒத்திவைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிரிப்பில் வலியுறுத்தியுள்ளது.

tirupati,festival,crowds ,திருப்பதி,பண்டிகை ,கூட்டம் அலைமோதும்

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 19 வரை பக்தர்கள் கூட்டம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே காணப்படும் என்பதால், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும், பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மங்களகரமான புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 முதல் தொடங்கி அக்டோபர் 17 வரை நீடிக்கும்.இக்காலத்தில் திருமலை கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக கூடுதலாக இருக்கும் என்பதால், அக்டோபர் 17க்கு பின் மேலே குறிப்பிட்டவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :