Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நவம்பர் 10ம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

நவம்பர் 10ம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

By: vaithegi Thu, 13 July 2023 10:04:13 AM

நவம்பர் 10ம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே இதனையொட்டி தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுண்ட்டர்களில் தொடங்கியது. மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் காலை 10 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இதனை அடுத்து நவம்பர் 9ம் தேதி பயணம் மேற்கொள்பவர்கள் நேற்று (ஜூலை12), நவம்பர் 10ம் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும் (ஜூலை 13), நவம்பர் 11ம் தேதி பயணம் செய்பவர்கள் ஜூலை 14ம் தேதியும், நவம்பர் 12ம் தேதி பயணம் செய்பவர்கள் ஜூலை 15ம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

tickets,train booking ,டிக்கெட்டுகள் , ரயில் முன்பதிவு

எனவே அதன்படி நேற்று முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களுக்குள்ளாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கான செல்லக்கூடிய விரைவு ரயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களின் 2-ம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இந்நிலையில் இன்று காலை நவம்பர் 10ம் தேதிக்கான முன்பதிவு தொடங்கியது. இன்றைய தினமும் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மேலும் அதுமட்டுமின்றி தென் மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து ரயிலில் டிக்கெட் விற்பனையும் 5 நிமிடங்களுக்கும் முடிந்தது.

Tags :