Advertisement

தங்கத்தை உருக்கி துண்டில் பூசி கடத்தி வந்த பயணி

By: Nagaraj Fri, 21 Oct 2022 7:00:05 PM

தங்கத்தை உருக்கி துண்டில் பூசி கடத்தி வந்த பயணி

திருவனந்தபுரம்: என்ன ஒரு தில்லாலங்கடி வேலை... வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தப்படுவதை கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த துண்டு தங்கத்தால் ஜொலித்தது. அதிகாரிகள் அந்த பகுதியை சோதனை செய்தனர். அப்போது தங்கம் திரவமாக்கப்பட்டு துணியில் பூசப்பட்டது தெரியவந்தது.

airport,towel,piece,gold,traveller ,கடத்தி, கைது, தடவி, துண்டு, தங்கம், பயணி

இதையடுத்து, தங்கம் கடத்தியதாக திருச்சூரைச் சேர்ந்த பகத்தை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த தங்கத்தின் அளவு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இதுகுறித்து அவர்கள் கூறும்போது, துண்டில் பூசப்பட்ட தங்கத்தை பிரித்தெடுத்து அளவீடு செய்து வருகிறோம். இந்த பணி முடிந்த பிறகுதான் எத்தனை கிராம் தங்கம் கடத்தப்பட்டது என்றனர்.

Tags :
|
|
|