- வீடு›
- செய்திகள்›
- சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டம்
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டம்
By: Karunakaran Fri, 17 July 2020 10:36:33 AM
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டே வருகின்றன.
இந்நிலையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா இயற்றவுள்ள இந்த மசோதா மூலம், சீன கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதிப்பதுடன், ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். இந்த மசோதா அமலுக்கு வந்தால் இருநாடுகள் இடையே உள்ள பதற்றம் மேலும் அதிகரிக்கும்.
இருப்பினும், இந்த திட்டம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க டிரம்ப் அரசு திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.