Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் பாதிப்பு பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த மத்திய அமைச்சர்

புயல் பாதிப்பு பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த மத்திய அமைச்சர்

By: Nagaraj Sun, 18 June 2023 12:03:45 PM

புயல் பாதிப்பு பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்த மத்திய அமைச்சர்

குஜராத்: புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு... தீவிரமான பிபர்ஜாய் புயலை உயிர்ச்சேதம் ஏதுமின்றி, குறைந்தபட்ச பொருட்சேதத்துடன் கடந்து விட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் புயல்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வான் வழியாக ஆய்வு செய்தார்.

union minister,amit shah,power connection,3400 villages,electrification ,மத்திய அமைச்சர், அமித்ஷா, மின் இணைப்பு, 3400 கிராமங்கள், மின்சாரம்

புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, மத்திய அரசின் வழிகாட்டலுடன் மனித உயிர்களைப் பாதுகாக்க குஜராத் மாநிலஅரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட 3400 கிராமங்களில் 1600க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டிருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags :