Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

By: Karunakaran Thu, 03 Sept 2020 1:54:37 PM

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவ செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா அறிவிப்பு

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா போன்ற நாடுகள் கூறி வருகின்றன. இதனால் அந்நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பூடான் நாடுகளின் எல்லையிலும் சீனா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சீன ராணுவத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனா தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது.

united states,china,military influence,indo-pacific region ,அமெரிக்கா, சீனா, இராணுவ செல்வாக்கு, இந்தோ-பசிபிக் பிராந்தியம்

“2020-ம் ஆண்டு சீன குடியரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்” என்கிற பெயரில் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததில், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஆயுத மோதலை தூண்டி சீனா தனது உரிமை கோரல்களுக்கான தந்திரங்களை அளவீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் கடல்சார் வளங்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிவாயு வளங்கள் மிகுந்த பகுதிகளின் உரிமை கோரல்களில் சீனா மிகவும் கட்டாய அணுகுமுறையை பயன்படுத்துகிறது எனவும், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சீனா வேகமாக ராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. இது அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றும் பிற நாடுகளுக்கும் மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
|