Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெனிசுலாவிற்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்தது

வெனிசுலாவிற்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்தது

By: Karunakaran Fri, 14 Aug 2020 6:14:14 PM

வெனிசுலாவிற்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா சிறைப்பிடித்தது

ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியபின், இருநாடுகள் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அணுஆயுதம் தயாரித்தல், அணுஆயுதம் ஏவுகணை தயாரித்தல் போன்ற காரணங்களை காட்டி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்ததால், இருநாடுகள் மேலும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதன்மை நாடாக ஈரான் விளங்குவதால், இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. அதன்படி, தன்னுடைய நட்பு நாடுகளிடம் ஈரானில் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியான பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

united states,four cargo ships,petrol,venezuela ,அமெரிக்கா, நான்கு சரக்குக் கப்பல்கள், பெட்ரோல், வெனிசுலா

பாரசீக வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை தங்களது கடற்எல்லைக்குள் நுழைந்ததாக அடிக்க ஈரான் சிறைப்பிடிப்பதும், விடுவிப்பதும் வழக்கம். இந்நிலையில் ஈரானில் இருந்து வெனிசுலாவிற்கு சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற நான்கு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த கப்பல்களை அமெரிககா பறிமுதல் செய்துள்ளது.

பொருளாதார தடையை மீறி ஈரான் அரசு செயல்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அரசு சார்பில் நான்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறக்குமாறு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது, பொருளாதார தடை நிபுணர்கள், சர்வதேச கடல் எல்லையில், பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவது சாத்தியமற்றது என நீதிபதிகள் கூறினர்.

Tags :
|