Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது

By: Karunakaran Thu, 10 Sept 2020 5:55:07 PM

அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது

விண்வெளிக்கு பயணம் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற சிறப்பை கல்பனா சாவ்லா, இந்தியாவுக்கும், பெண் இனத்திற்கும் தந்துள்ளார். இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் மார்ச் 17, 1962-ல் பனாரஸ் லால் சாவ்லா- சன்யோகி தேவி தம்பதியினருக்கு பிறந்தார். இவர் விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார்.

அமெரிக்காவின் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், அத்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஜீன் பியர்ரே ஹாரிசனை கல்பனா சாவ்லா 1983-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் நடந்த பல சுற்று நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல்பனாவும் ஒருவராக 1997-ல் ஆயத்தமானார்.

வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோமீட்டர் பயணித்து, 252 நாட்கள் விண்வெளியில் இருந்து பூமியை சுற்றியுள்ளார். இதற்குமுன், இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்திருந்தார். இதனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்ணாகவும் இரண்டாவது இந்தியராகவும் கல்பனா பெருமை பெற்றார்.

us spacecraft,astronaut,kalpana chawla,india ,அமெரிக்க விண்கலம், விண்வெளி வீரர், கல்பனா சாவ்லா, இந்தியா

2003-ல் பயணித்த விண்கலம், தனது 16 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடமே இருந்த நிலையில், விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட 7 விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. இந்நிலையில் அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ' நார்த்ரோப் க்ரம்மன் '' வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் இந்த விண்கலத்திற்கு 'எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலம் வரும் 29-ம் தேதி நாசாவின் மிட் அட்லாண்டிக் ஸ்பேஸ்போர்ட்டிலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.


Tags :