Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

By: Karunakaran Thu, 03 Sept 2020 2:41:06 PM

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் குற்றச்சாட்டு

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அங்கு அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன. அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம். வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது என அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

venezuelan president,us president,trump,assassination ,வெனிசுலா அதிபர், அமெரிக்க அதிபர்,டிரம்ப் படுகொலை

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில், நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டாலர் வழங்கியது. என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுலாவில் துப்பாக்கி சுடும் வீரர்களை நியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை டிரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உள்பட அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் 14 பேரை போதை பொருள் கடத்தல் காரர்களாக அமெரிக்கா அறிவித்தது. இதனால் அவர்களை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



Tags :
|