நம் தேசத்தின் குரல் மறைந்து விட்டது; அனிருத் உருக்கம்
By: Nagaraj Fri, 25 Sept 2020 9:26:41 PM
நம் தேசத்தின் குரல் மறைந்து விட்டது என்று எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி உயிரிழந்ததை அடுத்து திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பிரபலங்கள் அனைவரும் எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
எஸ்பிபியின் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு நம் தேசத்தின் குரல் மறைந்துவிட்டது என
அனிருத் உருக்கமாக கூறியுள்ளார்.
எஸ்பிபி உடனான நினைவுகள்
விலைமதிக்க முடியாதது, மறக்க முடியாதது. மிஸ் யூ.. லவ் யூ சார் என
பதிவிட்டுள்ளார். எஸ்பிபி அனிருத் இசையில் பேட்ட படத்தில் மரண மாஸ் மற்றும்
தர்பார் படத்தில் சும்மா கிழி ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.