Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு ... உபரிநீர் அப்படியே வெளியேற்றம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு ... உபரிநீர் அப்படியே வெளியேற்றம்

By: vaithegi Thu, 03 Nov 2022 7:01:01 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு ...   உபரிநீர் அப்படியே வெளியேற்றம்

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு .... ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதையடுத்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது.

அதன் பின்னர் மாலை நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையும் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.

mettur,surplus water ,மேட்டூர் ,உபரிநீர்


எனவே அதன்படி மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து உயர்ந்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் மிக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags :
|