மாதாமாதம் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்
By: Nagaraj Sun, 17 Sept 2023 07:21:40 AM
சென்னை : ரூ.1000 உரிமைத்தொகைக்கு தேர்வான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படும்.
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
நேற்று குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும்பாலான குடும்ப தலைவிகளுக்கு முதல்நாளே ரூ.1000 செலுத்தப்பட்டுவிட்டது. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல ஒவ்வொரு மாதமும் சரியாக 1.06 கோடி பேருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது அடுத்தடுத்த மாதங்களில் எப்போது ரூ.1000 வரவு வைக்கப்படும் என்ற கேள்வியும் மகளிர் மத்தியில் எழுந்தது.
இதையடுத்து இது குறித்து பதிலளித்த தமிழக அரசு இத்திட்டத்திற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் 15 -ம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு சரியாக ரூ.1000 வரவு வைக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.