Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு உலகமே இந்தியாவைத்தான் எதிர்பார்க்கிறது - பில்கேட்ஸ்

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு உலகமே இந்தியாவைத்தான் எதிர்பார்க்கிறது - பில்கேட்ஸ்

By: Karunakaran Wed, 16 Sept 2020 2:42:46 PM

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு உலகமே இந்தியாவைத்தான் எதிர்பார்க்கிறது - பில்கேட்ஸ்

சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 2.95 கோடி பேரை பாதித்துள்ளது. மேலும், 9.34 லட்சம் உயிர்களை கொரோனா பலி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பலவும் கொரோனா தடுப்பூசி தயாரித்து, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பல்வேறு கட்ட சோதனையில் இறங்கி உள்ளன.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் முக்கிய பங்கு வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் அளித்த சிறப்பு பேட்டியில், உலக போருக்கு பின்னர் உலகம் எதிர்கொள்ளும் அடுத்த மிகப்பெரிய விஷயம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்தான். கொரோனா தடுப்பூசி வந்தவுடன், பெரிய அளவிலான தயாரிப்புக்கு உலகமே இந்தியாவைத்தான் எதிர்பார்க்கிறது. அந்த வகையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகளவில் கட்டுப்படுத்த, தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

world,india,corona vaccine,bill gates ,உலகம், இந்தியா, கொரோனா தடுப்பூசி, பில் கேட்ஸ்

உலகளவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்வதில் இந்தியாவின் விருப்பமும், அந்த தடுப்பூசிகளில் சிலவற்றை பிற வளரும் நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதும் அதன் முக்கியமான பகுதி ஆகும். எங்களுக்கு இதில் பங்கு இருப்பதை உறுதிப்படுத்த இந்தியா உதவும்.அஸ்ட்ரா ஜெனேகா, ஆக்ஸ்போர்டு அல்லது நோவாவேக்ஸ் அல்லது ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகியோரிடம் இருந்து வந்தாலும்கூட, ஒரு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் யோசனையை செயல்படுத்த நாங்கள் பேசி வருகிறோம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசிகளில் பல, மூன்றாவது கட்ட அவசர உரிம ஒப்புதலை எட்டி விடும் என்று நான் நம்புகிறேன். அதில் ஏமாற்றம் ஏற்படவும் கூடும். ஆனால் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டம் குறித்த ஆரம்ப கட்ட தரவுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆன்டிபாடிகளின் அளவை பொறுத்தமட்டில், இந்த தடுப்பூசிகளில் சில நம்பிக்கைக்கு உரியவை. தடுப்பூசிகளின் விலையை குறைவாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும். மேலும், அவை மிக அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags :
|
|