Advertisement

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்

By: Nagaraj Sat, 21 Jan 2023 10:04:12 AM

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்

புதுடில்லி: மல்யுத்த வீரர்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இந்த போராட்டத்திற்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

‘இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். லக்னோவில் நடக்கும் பயிற்சி முகாமில் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளிடம் அத்து மீறி நடந்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கிறது. எதிர்ப்பு தெரிவித்தால் மிரட்டல் விடுக்கின்றனர் என்று பல குற்றச்சாட்டுகளை எழுப்பப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டத்தில் இறங்கினர்.

petition,sexual complaint,three days,withdrawal,wrestlers ,பாலியல் புகார், மல்யுத்த வீரர்கள், மூன்று நாட்கள், வாபஸ், ோரிக்கை

பிரிஜ் பூஷன் ஷரண் சிங் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பிரிஜ் பூஷனை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க 7 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக உறுதியளித்தது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதுகுறித்து மல்யுத்த வீரர் பஜ்ராங் புனியா கூறுகையில், ‘மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் எங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவருக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கிறோம். இதையடுத்து எங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்று கொள்கிறோம் என்றார்.

Tags :