Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆடாமல் அசையாமல் நின்றபோதும் கரடியுடன் செல்பி எடுத்த இளம்பெண்

ஆடாமல் அசையாமல் நின்றபோதும் கரடியுடன் செல்பி எடுத்த இளம்பெண்

By: Nagaraj Wed, 22 July 2020 11:58:26 AM

ஆடாமல் அசையாமல் நின்றபோதும் கரடியுடன் செல்பி எடுத்த இளம்பெண்

ஆடாமல் அசையாமல் கரடியுடன் செல்பி... மெக்சிகோவில் இளம்பெண் ஒருவர் கரடி அருகில் இருக்கும் அச்சம் இல்லாமல் செல்ஃபி எடுத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவில் மலையேற்றத்திற்கு இளம்பெண்கள் சிலர் சென்றனர். அந்த சமயத்தில் அங்கு கரடி ஓன்று வந்துள்ளது. அந்த கரடி அந்த இளம்பெண்கள் பின்னால் நின்று உள்ளது. கரடி நிற்பது கண்டு அவர்கள் இரண்டு பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தாங்கள் ஓடினால் கரடி வந்து தாக்கி விடுமோ என்று பயத்தில் உறைந்து போன நிலையில் இருந்துள்ளனர்.

adolescent,bear,selby,adamant,viral ,இளம்பெண், கரடி, செல்பி, ஆடாமல் நின்றனர், வைரல்

அந்த கரடி அவர்கள் அருகில் வந்துள்ளது. இதனால்அவர்கள் இரண்டு பேரும் அமைதியாக நின்றிருந்தனர். அங்கு வந்த கரடி ஒரு இளம்பெண் அருகில் வந்து எதிர்பாராத விதமாக இரண்டு காலால் எழுந்து நின்று, பெண்ணின் தலை முடியை மோப்பம் பிடித்துள்ளது. கரடி அருகில் இருந்தும் அசட்டு தைரியத்தில் ஒரு பெண் செல்ஃபி எடுத்துள்ளார். இறுதியில், இளம்பெண்ணை மோப்பம் பிடித்த கரடி அங்கிருந்து சென்றதும். அந்த பெண்கள் அங்கிருந்து விரைவில் தப்பித்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அப்படியே 'ஷாக்கிங்' மோடில் உள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags :
|
|