Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 57,542 பேர்

நாடு முழுவதும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் 57,542 பேர்

By: vaithegi Sun, 16 Apr 2023 10:00:30 AM

நாடு முழுவதும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்  57,542 பேர்

புதுடெல்லி: நாளைக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.

இதையடுத்து கடந்த 5-ந் தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந் தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் மட்டும் 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

treatment,corona,india ,சிகிச்சை , கொரோனா, இந்தியா

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நேற்று தொடங்கி இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும், 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|