Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு மற்றும் சூறாவளி காற்று வீச இருப்பதாகவும் எச்சரிக்கை

அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு மற்றும் சூறாவளி காற்று வீச இருப்பதாகவும் எச்சரிக்கை

By: vaithegi Thu, 25 May 2023 3:30:01 PM

அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு மற்றும் சூறாவளி காற்று வீச இருப்பதாகவும் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சூறாவளி காற்று வீச இருப்பதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு .... தமிழகம் முழுவதும் நேற்று வரை வறண்ட வானிலையே நிலவி வந்தது.

இதையடுத்து இந்த நிலையில், இன்று முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு சில இடங்களில் பலத்த காற்று மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hurricane wind,rain ,சூறாவளி காற்று ,மழை

அதைத்தொடர்ந்து நாளை முதல் மே 28ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னர் வளைகுடா, குமரிக்கடல் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் இந்த பகுதிகளில் குறிப்பிட்ட நாட்கள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Tags :