தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Sun, 09 Apr 2023 10:24:29 AM
சென்னை : தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ....
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் 9, 10-ம் தேதிகளில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வருகிற 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோடை வெயில் தொடங்கி வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியிருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.