ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்சாரம் இருக்காது
By: vaithegi Thu, 13 Oct 2022 8:40:42 PM
ஈரோடு : மின்சாரம் இருக்காது ... ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின்
நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை)
மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், சிவகிரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட
சிவகிரி, வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளிலும்
இதனை அடுத்து காகம்,
கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை,
விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்
பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம்
அதை தொடர்ந்து பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில்,
தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு,
கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம்
மேலும்
முத்தையன் வலசு, கருக்கம் பாளையம், ஊஞ்சலூர், ஒத்தகடை, வடக்கு
புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14ஆம் தேதியன்று
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.