Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது

இந்த பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது

By: vaithegi Fri, 16 Dec 2022 7:34:13 PM

இந்த பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது

சென்னை: அரியலூர், தேளுர், நடுவலூர் மற்றும் செந்துறை துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் தடை செய்யப்படுவதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.அதன்படி, 110/33- 11 KV அரியலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கயர்லாபாத், இராஜிவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியங்குடிகாடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம் மற்றும் குறுமஞ்சாவடி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, 33/11KV - தேளுர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம் மற்றும் மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

electricity,maintenance work ,மின்சாரம் , பராமரிப்பு பணி

மேலும், 33/11KV - நடுவலூர் துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நந்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சத்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுழி முழுவதும் நாளை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, 33/11KV - செந்துறை துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் முழுவதும் காலை 9 மணி முதல் பணி முடியும் மின் தடை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :