Advertisement

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Tue, 02 May 2023 12:17:31 PM

சென்னையில் நாளை இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மின் தேவையானது இன்னும் உயரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையிலும் மின் வாரியம் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் தொடர்ந்து துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாளை சென்னையில் மயிலாப்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மங்களா நகர், அம்பாள் நகர், ஆர்.இ.நகர் பகுதி, பூந்தமல்லி நகராட்சி முழுவதும், காமராஜ் நகர் கே.கே நகர் ஆகிய பகுதிகளிலும்

electricity .chennai ,மின்சாரம் .சென்னை

இதனை அடுத்து லீலாவதி நகர் எஸ்.ஆர்.எம்.சி , ஜீவா நகர் கரையான்சாவடி முழுவதும், வசந்தபுரி, கோவூர் ஏரிக்கரை, திருமலை நகர், புத்தவேடு திருமுடிவாக்கம், ஆகிய பகுதிகளில் மே 3ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று ராயல் கேஸ்ட்டல் அப்பார்ட்மெண்ட், எ.ஆர்.ரகுமான் அவென்யூ மாங்காடு பட்டூர் பஜார் தெரு, கிழக்கு முகப்பேர் கலெக்டர் நகர், பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், தெள்ளியார் அகரம், தனலட்சுமி நகர், முத்தமிழ் நகர், ரம்யா நகர், கங்கையம்மன் கோயில் தெரு, அமிர்தா பிளாட்ஸ், பரணிபுத்தூர் கிராமம் ஒரு பகுதி, செம்மபரம்பாக்கம் நசரத்பேட்டை ஊராட்சி, அகரமேல், மலையம்பாக்கம், கலைவாணர் காலனி, மெடிமிக்ஸ் அவென்யூ போன்ற பகுதிகளிலும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.

Tags :