Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (அக்.12) மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

நாளை (அக்.12) மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. இந்த மாவட்டத்தில் மின்சாரம் இருக்காது

By: vaithegi Tue, 11 Oct 2022 4:59:22 PM

நாளை (அக்.12) மாதாந்திர மின் பராமரிப்பு பணி  ..   இந்த மாவட்டத்தில்  மின்சாரம் இருக்காது

மதுரை : மின்சாரம் இருக்காது ... தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. இதை முன்னிட்டு குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் அவற்றின் மர கிளைகள் வெட்டப்படுகிறது.

அதனை தொடர்ந்து பழைய மின் கம்பிகளை மாற்றுதல், பழுதான மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (12.10.2022) மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

electricity,electrical maintenance work ,மின்சாரம் , மின் பராமரிப்பு பணி

அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.அதனால் அந்த துணைமின் நிலையத்திற்கு உள்பட்ட பிரவியம்பட்டி,கொசவபட்டி, பூசாரிப்பட்டி பகுதிகளிலும்

மேலும் அய்யங்கோட்டை காா்னா், டபேதார் சந்தை, எழுவம்பட்டி, வடுகப்பட்டி, திருவாலவாயநல்லூர், நகரி சாலை, ஜோதி மாணிக்கம்கொடிக்குளம், உடன் காட்டுப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Tags :