Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது

அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது

By: vaithegi Mon, 03 Oct 2022 4:02:10 PM

அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மர கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது

மேலும் அதை தொடர்ந்து மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பு கருதி பணிகள் முடிவடையும் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது.

electricity supply,maintenance work ,மின்சார விநியோகம்,பராமரிப்பு பணி

இதையடுத்து மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதனால் காரைக்குடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கல்லூரி சாலை, கல்லுக்கட்டி, பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு (ஹவுசிங் போர்டு), செக்காலைக்கோட்டை, பாரி நகர், செக்காலை சாலை, புதிய, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார தடை என அந்த பகுதி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags :