Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 7-ம் தேதி இந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணி .. பவர் இருக்காது

வருகிற 7-ம் தேதி இந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணி .. பவர் இருக்காது

By: vaithegi Sun, 05 Mar 2023 1:26:56 PM

வருகிற 7-ம் தேதி இந்த பகுதிகளில் மின் பராமரிப்பு பணி      ..   பவர் இருக்காது

சென்னை: தமிழக அரசு மின்வாரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ஆதார் – மின் நுகர்வோர் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு மத்தியில் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்குவதிலும் மின்வாரியம் கவனம் செலுத்தி கொண்டு வருகிறது.

அதனால் தான் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை உணர்ந்து மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்படுகிறது.

maintenance work,power , பராமரிப்பு பணி,பவர்

இதனை அடுத்து இந்த மின் விநியோகம் தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே பதிவிடப்படுகிறது. அதன் அடிப்படையில் வரும் மார்ச் 7ம் தேதி எந்தெந்த பகுதிகள் மின் விநியோகம் தடை ஏற்படும் என்பதை பார்ப்போம்.

அதன்படி தர்மபுரி:பைசுஹல்லி, கேவி எஸ் எஸ், சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டு செட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிக்கரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம், கோட்டை, சோலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வருகிற 7-ம் தேதி மின் விநியோகம் தடை.

Tags :