நாளை இங்கு பவர் இருக்காது .. முழு விவரம் உள்ளே
By: vaithegi Fri, 28 July 2023 3:13:27 PM
சென்னை: சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிப்பு ...
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது. நாளைய தினம் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே இதன் காரணமாக : ஐ.டி. காரிடர்: சிறுசேரி சிப்காட், சோழிங்கநல்லூர் உமா மகேஸ்வரி நகர், காந்தி நகர், மாடல் பள்ளி சாலை, பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.