Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது

By: vaithegi Tue, 09 Aug 2022 2:33:29 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி  மின்  விநியோகம் இருக்காது

திருநெல்வேலி : மின்சாரம் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத தேவையாக இருக்கிறது. இந்த நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுதல், மின் கசிவுகள் ஏற்படுதல் , மின்கம்பங்களில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின் இணைப்பு கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் தீ பிடித்தல் ஆகிய பல வகையில் பொதுமக்களுக்கு விபத்துகள் ஏற்பட கூடும்.

இந்த வகையில் மின்சாரம் மூலம் ஏற்படும் தீய விளைவுகளை கட்டுப்படுத்தவும் , மின்சார கம்பியில் எதென்னும் பழுதுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

electricity distribution,tirunelveli ,மின்  விநியோகம் ,திருநெல்வேலி

இதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தினால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளான புத்தூர், சீதபற்பநல்லூர், உகந்தன்பட்டி, சுப்ரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குலம், மாறாந்தை, கல்லத்திக்குளம், நாலாங்குறிச்சி, கீழ கரும்புளியூத்து போன்ற பகுதிகளிலும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Tags :