Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

By: vaithegi Fri, 05 Aug 2022 6:47:29 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது

திருவள்ளூர் : உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காகவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

எனவே அப்பணியில் மின் சாதனங்கள் சரியாக உள்ளதா மற்றும் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா எனசரிபார்க்கப்படும். அதன் மூலம் மின் கம்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளால் ஆபத்துகள் நேரிடும் அபாயம் குறைக்கப்படும். இப்பணியானது நாளை (ஆக. 6) திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கண்டிகை துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ளது.

power distribution,thiruvallur ,மின்விநியோகம் ,திருவள்ளூர்

எனவே அதன் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என அம்மாவட்ட மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மின் நிலையத்தில் பணிகள் மேற்கொள்ளும் போது யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வீதம் அந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய சில பகுதிகளுக்கு மின் தடையாகும் மற்றும் அதை குறித்ததான விவரங்களும் முன்னதாகவே செய்திக்குறிப்பில் வெளியாகும்.

அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தேர்வாய் கண்டிகை சிப்காட், தேர்வாய் கிராமம், கோபால்ரெட்டி கண்டிகை, குருவராஜகண்டிகை, பனஞ்சாலை, அமரம்பேடு, சிறுவாடா, கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை என்.எம்.கண்டிகை, பூவலம்பேடு, சின்னபுலியூர், தாணிப்பூண்டி, பூதூர் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை என தேர்வாய் கண்டிகை துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் லாவண்யா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :