Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவகாசியில் நாளை ஜூலை 8ம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் மின்தடை

சிவகாசியில் நாளை ஜூலை 8ம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் மின்தடை

By: vaithegi Thu, 07 July 2022 3:01:00 PM

சிவகாசியில் நாளை ஜூலை 8ம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் மின்தடை

சிவகாசி: தமிழ்நாடு மின் வாரியம் எந்த வித விபத்துகளும் நடக்காமல் இருக்க மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் இருக்கும் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி அனைத்து பகுதிகளுக்கும் சப்ளை ஆகும் வயர்கள் அறுந்து இருக்கிறதா என்று சரி செய்வார்கள்.

மேலும், மின் வயர்களில் உராய்வு பெறும் மரக் கிளைகளை அகற்றுதல், ஏதேனும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதனை மின்தடையின் போது சரி செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.

power outage,sivakasi ,மின்தடை,சிவகாசி

அதை தொடர்ந்து சிவகாசி கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழ திருத்தங்கல், அதிவீரன்பட்டி,

மேலும் நமஸ்கரித்தான் பட்டி, சாணார்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 8ம் தேதி காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டு மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி பாவநாசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :