அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்
By: vaithegi Mon, 10 Apr 2023 09:51:51 AM
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ....
கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இன்று இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.
மேலும் அத்துடன் 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக் கூடும் எனவும் கூறியிருந்தது.
இதனை அடுத்து அதேநேரம் கோடை வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைத்து வருகிறது. சித்திரை மாதம் தொடங்கியதும் கத்திரி வெயிலும் தொடங்கிவிடும். அப்போது வெயில் தாக்கல் கூடுதலாகவே இருக்கும் என்பதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்வப்போது ஆறுதல் அளிக்கும் விதமாக மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.