Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் ரெட் அலர்ட்

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் ரெட் அலர்ட்

By: vaithegi Wed, 07 Dec 2022 12:51:55 PM

இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் ரெட் அலர்ட்

சென்னை: பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற இருக்கிறது.இந்த புயலுக்கு மண்டாஸ் புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த புயல் தென் மேற்கு வங்க கடலை நாளை வந்தடையும் என்பதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டி தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

red alert,heavy rain ,ரெட் அலர்ட் ,கனமழை

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மழை தொடங்கும் எனவும், நள்ளிரவு அதிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை மறுதினம் (டிச 9) அதிகமான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அன்றைய தினம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags :