Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் பகலில் வெயில், மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

இந்த மாவட்டங்களில் பகலில் வெயில், மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 08 June 2023 12:22:05 PM

இந்த மாவட்டங்களில் பகலில் வெயில், மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 5 மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு ..... கடந்த சில நாட்களாகவே வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்து உள்ளார்.

rainy,sunny,chennai ,மழை ,வெயில்,சென்னை

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளார்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ மிக தீவிர புயலாக வலுவடைந்ததது. இது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags :
|
|