Advertisement

இந்த ரயில்கள் பகுதியாக ரத்து

By: vaithegi Sat, 25 Mar 2023 11:24:53 AM

இந்த ரயில்கள்  பகுதியாக ரத்து

சென்னை: சென்னையில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கியமான பொதுப் போக்குவரத்து மின்சார ரயில்கள். இந்த ரயில் சேவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் தாம்பரம், சென்ட்ரல் மற்றும் செங்கல்பட்டு இடங்களிலிருந்து பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் இன்று மற்றும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், இரவு 11.20 மணியளவில் மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில் சேவை பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

southern railway administration ,தெற்கு ரயில்வே நிர்வாகம்

அதே போன்று தினசரி காலை 3.50 மணியளவில் கும்மிடிப்பூண்டி – சென்னை சென்டிரல் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று நிறுத்தப்படும். மேலும், கும்மிடிப்பூண்டி முதல் சென்னை சென்டிரல் வரை காலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை மீஞ்சூர் பகுதியில் ரத்து செய்யப்படும்.

மேலும் இது தவிர, கும்மிடிப்பூண்டி முதல் சென்னை சென்டிரல் வரை தினசரி காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் பொன்னேரி வரையும், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :