Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ’இந்தியா’ என்றாலே இவர்களுக்கு அச்சம் ..முதலமைச்சர் பேச்சு

’இந்தியா’ என்றாலே இவர்களுக்கு அச்சம் ..முதலமைச்சர் பேச்சு

By: vaithegi Sun, 03 Sept 2023 2:53:07 PM

’இந்தியா’ என்றாலே இவர்களுக்கு அச்சம்  ..முதலமைச்சர் பேச்சு

சென்னை:’இந்தியா’என்றாலே பாஜகவுக்கு அச்சம் ... சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம், இது தான் அண்ணா கண்ட திமுக. யாரின் காலிலும் விழுந்து பதவியை பெற வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை காப்பாற்றினோம். இதேபோல நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

chief minister,india ,முதலமைச்சர் ,இந்தியா

’இந்தியா’ என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வில்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்போது ஆதரவளிக்கிறது என அவர் கூறினார்.

Tags :