Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று கூறி ஏமாற்றுகின்றனர்... கவனம் தேவை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று கூறி ஏமாற்றுகின்றனர்... கவனம் தேவை

By: Nagaraj Tue, 30 May 2023 11:06:40 PM

வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று கூறி ஏமாற்றுகின்றனர்... கவனம் தேவை

மட்டக்களப்பு: ஏமாறாதீங்க என எச்சரிக்கை... மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

public,police,employment,bureau,warning ,பொதுமக்கள், போலீசார், வேலை வாய்ப்பு, பணியகம், எச்சரிக்கை

ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர்.

வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை பொதுமக்கள் நாட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

Tags :
|
|
|