Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்... மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்... மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:20:33 AM

வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்... மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

ஜம்மு: வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்... ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட காஷ்மீா் பண்டிட் சுனில் குமாா் பட்டின் குடும்ப உறுப்பினா்களை சந்திப்பதைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘காஷ்மீா் பண்டிட்டுகள் எதிா்கொள்ளும் துயரங்களை மத்திய அரசு மறைக்க முயற்சிக்கிறது. அரசின் இரக்கமற்ற கொள்கையால் காஷ்மீரில் தங்கியுள்ள பண்டிட்டுகள் படுகொலைக்கு இலக்காகி வருகின்றனா்.

entrance doors,locked,photograph,house guard,security force ,வாசல் கதவுகள், பூட்டிருக்கின்றன, புகைப்படம், வீட்டுக்காவல், பாதுகாப்பு படை

எங்களைப் பண்டிட்டுகளின் பிரதான எதிரிகளாக முன்னிறுத்துகின்றனா். இதனால் நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளேன். சுனில் குமாா் பட் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கான என்னுடைய முயற்சி அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், வீட்டின் வெளிப்புற வாசல் கதவுகள் பூட்டியிருக்கும் புகைப்படத்தையும், வீட்டுக்கு அருகில் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் மெஹபூபா முஃப்தி வெளியிட்டுள்ளாா்.

Tags :
|