Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனது செல்போனையும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பதாக தெரிவித்தனர்... ராகுல்காந்தி தகவல்

எனது செல்போனையும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பதாக தெரிவித்தனர்... ராகுல்காந்தி தகவல்

By: Nagaraj Mon, 06 Mar 2023 9:55:23 PM

எனது செல்போனையும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பதாக தெரிவித்தனர்... ராகுல்காந்தி தகவல்

லண்டன்: உளவுத்துறை அதிகாரிகள் எனக்கு போன் செய்து எனது செல்போனையும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பதாகத் தெரிவித்து செல்போனில் பேசும்போது கவனமாக இருக்குமாறு எச்சரித்தனர் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நீதிபதி பிசினஸ் ஸ்கூலில், ’21-ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஏராளமான அரசியல் தலைவர்களின் செல்போன்களை, இஸ்ரேலை சேர்ந்த, பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டது.

உளவுத்துறை அதிகாரிகள் எனக்கு போன் செய்து எனது செல்போனையும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பதாகத் தெரிவித்து செல்போனில் பேசும்போது கவனமாக இருக்குமாறு எச்சரித்தனர்.

rahul gandhi,software,spy, ,உளவு மென்பொருள், ஒட்டுக் கேட்கப்பட்டது, பெகாசஸ்

எனது செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டது. இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியலமைப்பில், இந்திய தேசம் மாநிலங்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த ஒருங்கிணைந்த அமைப்புக்கு பேச்சு சுதந்திரம் தேவைப்படுகிறது.

அந்த பேச்சு சுதந்திரம் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags :
|