Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எந்த சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என இவர்கள் நினைக்கின்றனர் ..முதல்வர் மு.க.ஸ்டாலின்

எந்த சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என இவர்கள் நினைக்கின்றனர் ..முதல்வர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Sun, 24 Sept 2023 7:25:02 PM

எந்த சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என இவர்கள் நினைக்கின்றனர்  ..முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என பிரதமர் மோடி கூறினாரே, மீட்டாரா? மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என்று கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் தருவேன் என்றார் மோடி, வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தாரா?

அதையடுத்து படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறார் மோடி. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சிவுள்ளது. பகோடா விற்க சொல்வதுதான் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் மோடி அரசு தள்ளிவிட்டது.

chief minister m. k. stalin,bjp ,முதல்வர் மு.க.ஸ்டாலின்,பாஜக

மேலும் மோடி அரசிடம் புதிதாக எதையும் கேட்கவில்லை. மேடைக்கு மேடை நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என்றுதான் கேட்கிறோம். சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றது ஒன்றிய பாஜக அரசு, அதை செய்தார்களா? மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஈரோடு மஞ்சள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

ஜி20 மாநாடு நடத்தியதை சாதனையாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. ஜி20 மாநாட்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கு அவர்கள் உரிமையும் கோர முடியாது. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதும் பாஜக ஆட்சியின் சாதனை அல்ல. 2006ல் தொடங்கி படிப்படியாக நிறைவேற்றப்பட்டு நிலவில் சந்திரயான் 3 தடம் பதித்து உள்ளது. எச்சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என நினைக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்காகவே மகளிர் மசோதாவை நிறைவேற்றி உள்ளனர்.” என அவர் பேசினார்.

Tags :